வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் அன்பு (வயது 20). இவர் தனது தந்தையிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவர் சிறிது காலம் கழித்து வாங்கி தருவதாக கூறினார். இதனால் மனமுடைந்த அன்பு கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





