விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை


விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை
x

இண்டூர் அருகே விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 52). பம்பு செட் மெக்கானிக். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ராஜா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story