தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x

கடத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள வெள்ளிங்கிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயந்தி (வயது 28). இவர்களுக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஜெயந்திக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி ஜெயந்தி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்தபோது ஜெயந்தி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story