ஓசூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு ஒழுங்காக செல்லவில்லை. இதனால் அவருடைய மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த நாகராஜ், அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story