காரிமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


காரிமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 9:39 AM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அடிலம் ஊராட்சி ஏரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் சரஸ்வதி (வயது 22). இவருக்கும், அரியகுளம் அருகே உள்ள ஒன்னியபட்டியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கண்வன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக, சரஸ்வதி தனது கணவர் மணிகண்டனிடம் கோபித்து கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story