வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:47 PM GMT)
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ். தொழிலாளி. இவருடைய மனைவி தேவம்மா (வயது 22). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் தேவம்மா மனமுடைந்தார். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவருடைய பிணம் கிணற்றில் மிதந்தது. இதனை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று, தேவம்மா உடலை மீட்டனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 6 ஆண்டுகளில் தேவம்மா தற்கொலை செய்துள்ளதால் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story