சூளகிரி அருகேவடமாநில வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


சூளகிரி அருகேவடமாநில வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2023 7:00 PM GMT (Updated: 29 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர்த் பகுதியை சேர்ந்தவர் ரூப்சிங் (வயது 22). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் தனது உறவினர் விக்ரம்சிங் என்பவருடன் தங்கியிருந்து வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரூப்சிங் கொல்லப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் கம்பெனியில் கடந்த 27-ந் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story