அரூர் அருகே கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே உள்ள பாப்பண்ணா வலசையை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் திருநாவுக்கரசு (வயது 24). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த திருநாவுக்கரசு சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் திருநாவுக்கரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
Next Story