ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 8:01 AM GMT)

ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் முள்ளுவாடி பகுதியை சேர்ந்தவர் சபீர். இவருடைய மகன் சாதிக் (வயது 40). இவருடைய மனைவி நஜீமா (35). சாதிக் ராசிபுரத்தில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நஜீமா கணவரிடம் கோபித்து கொண்டு சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் சாதிக் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் இவர் சிலரிடம் கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தாய் ரஜியா ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story