கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மல்லிகா (வயது 55). மல்லிகாவின் கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் மல்லிகா தனது தங்கையின் கணவரோடு பெங்களூருவில் வசித்து வந்தார். கடந்த 17-ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு ஊருக்கு வந்த மல்லிகா அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





