பஞ்சப்பள்ளி அருகே துணி வியாபாரி தற்கொலை


பஞ்சப்பள்ளி அருகே துணி வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2023 1:00 AM IST (Updated: 26 Jun 2023 10:29 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையத்தை சேர்ந்தவர் மாரிசெட்டி (வயது56). துணி வியாபாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story