ரூ.37½ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்


ரூ.37½ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்
x

ரூ.37½ லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

அதன்படி நேற்று 87 விவசாயிகள் 57 ஆயிரத்து 473 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 8 வியாபாரிகள் ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.70.89-க்கும், குறைந்தபட்சம் ரூ.56.59-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.37 லட்சத்து 64 ஆயிரத்து 805-க்கு வணிகம் நடைபெற்றது.

இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story