தெற்கு போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


தெற்கு போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x

வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து உடனடி விசாரணை செய்ய வேண்டும். பகல் நேரங்களில் ஏ.டி.எம்.மையம், வங்கி பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story