போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை


போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:47 PM GMT)

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மையனூரை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 5 வயதிலேயே போலிேயாவால் பாதிக்கப்பட்ட ஜான்சிராணியின் இடது காலின் பாதம் வளைந்து இருந்தது. இவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் வளைந்த கால் சரிசெய்யப்பட்டு, தற்போது அவர் நன்றாக நடக்கிறார். இவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சுரேஷ், சீனிவாசன் ஆகியோரை முதன்மை மருத்துவர் சாந்தகுமாரி பாராட்டினார். இதேபோல் திருவம்பட்டு ஆதி என்பவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story