'சிங்கம்' பட சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீஸ்காரர்: நீதிபதி கண்டித்ததால் உடனடியாக சரிசெய்தார்


சிங்கம் பட சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீஸ்காரர்: நீதிபதி கண்டித்ததால் உடனடியாக சரிசெய்தார்
x

வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்தவர்: ‘சிங்கம்’ பட சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீஸ்காரர் நீதிபதி கண்டித்ததால் உடனடியாக சரிசெய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் அம்பலமூலா போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் கண்ணன் என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ஒரு வழக்கு சம்பந்தமாக ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது ராஜேஷ் கண்ணன் சிங்கம் திரைப்படத்தில் வரும் நடிகர் சூர்யா போல் பெரிய மீசை வைத்திருந்தார்.

இதை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதி முருகன், மீசை வைக்க உயர் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தரப்பட்டு உள்ளதா என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் மீசையை சரி செய்யுமாறும் கண்டிப்புடன் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் செய்வதறியாமல் திகைத்தார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக வெளியே சென்று அருகில் உள்ள அழகு நிலையத்தில் தனது மீசையை வெட்டி சரிசெய்த பின்னர் மீண்டும் கோர்ட்டுக்கு வந்தார்.

1 More update

Next Story