அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடைநீக்கம்


அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடைநீக்கம்
x

நடுரோட்டில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தில் அரசு ப் டிரைவலர், கண்டக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வேலூர்

பேரணாம்பட்டு

நடுரோட்டில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தில் அரசு ப் டிரைவலர், கண்டக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு போக்குவரத்தக்கழக பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணிக்கு வேலூரிலிருந்து புறப்பட்டு பேரணாம்பட்டுக்கு வந்து கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் பேரணாம்பட்டை சேர்ந்த பயணிகள் 5 பேர் மற்றும் குடியாத்தம் பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் பேரணாம்பட்டு நகருக்குள் செல்லாமலேயே பேரணாம்பட்டு புத்துக் கோயில் சந்திப்பு சாலையில் பயணிகளை நடுரோட்டில் கொட்டும் மழையில் இறக்கி விட்டு பணிமனைக்கு சென்றது. இது குறித்து செய்திகள் வெளியானது.

தகவலறிந்த போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, பேரணாம்பட்டு கிளை மேலாளர் ரமேஷை விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். விசாரணையில் பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் தெரிய வந்தது இதனையடுத்து நேற்றிரவு அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சத்திய நாராயணன், உடந்தையாக இருந்த பணிமனை காவலாளி கவுதமன் ஆகிய 3 பேரை பணியிடைநீக்கம் செய்து வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டார்.


Next Story