புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடு


புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடு
x

புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் கடந்த 3-ந் தேதி நடந்தது. அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி திருத்தேர் வடம்பிடித்தலும், தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும், நேற்று காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு ஸ்ரீதேவி, பூதேவி தாயார் மற்றும் மதனகோபாலசுவாமி உற்சவ மூர்த்திகள் வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இதில் யாதவமகாஜன மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை மட்டையடி நிகழ்ச்சியும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு விடையாற்றி விழாவும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி திருத்தேர் திருவிழா செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை பெருமாள் திருமஞ்சனம், கம்பத்து ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவிராயருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், இரவு பெருமாள் ஏகாந்தசேவையுடன் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. பங்குனி உத்திர பெருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் சீர்பாத பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story