சுவாமி, அம்பாள் வீதிஉலா


சுவாமி, அம்பாள் வீதிஉலா
x

ஆனிப்பெருந்திருவிழா: சுவாமி, அம்பாள் வீதிஉலா

திருநெல்வேலி

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதிஉலா சென்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வௌ்ளி சிம்ம வாகனத்திலும் வீதிஉலா சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதையொட்டி கோவில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

4-வது திருநாளான இன்று (புதன்கிழமை) காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. கலையரங்கில் பரதநாட்டியம், சொற்பொழிவு, பக்தி பாடல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.


Next Story