பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x

பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் உள்ள பால விநாயகர், பாவாடைராயர், பைரவி, நாகாத்து அம்மன், பாலமுருகன் ஆகிய பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளியுள்ள பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 7-ம் நாளான நேற்று மாலை கோவிலில் பூச்சொரிதல் மற்றும் இரவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக பெரியநாயகி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story