வேதியியல் ஆசிரியர் செய்த வேதனை...மாணவிகளை டேட்டிங் அழைத்து சென்று சில்மிஷம்... போக்சோவில் கைது


வேதியியல் ஆசிரியர் செய்த வேதனை...மாணவிகளை டேட்டிங் அழைத்து சென்று சில்மிஷம்... போக்சோவில் கைது
x

சென்னை, முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ஸ்ரீதரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை,

சென்னையிலுள்ள முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் ராமசாமி என்பவர் ஆசியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் அனைத்து மாணவ- மாணவியரின் எண்களையும் ஆசிரியர்கள் பெற்று வைத்திருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி மாணவிகளின் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பத்தொடங்கி தனது லீலைகளை காட்ட தொடங்கினார்.

ஆசிரியர் என்று பயந்து பதற்றத்துடன் பதிலளிக்க ஆரம்பித்த மாணவிகளை தன் வளையில் சிக்க வைத்தார் ஸ்ரீதர். அதேபோல் அவர் மாணவிகளிடம் அத்துமீறி பேசி வெளியே செல்வோமா என்று கேட்டும் உள்ளார்.

சில மாணவிகள் இவரை நம்பி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவருடன் வெளியேவும் சென்றுள்ளனர். இவ்வாறு பல முறை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மாணவிகளை அழைத்துச்சென்றது மட்டுமில்லாமல் அவர்களிடம் தகாத முறையிலும் நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது

ஒரு அளவுக்கு மேல் சகித்துக்கொள்ள முடியாத மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளனர். பின்னர் இது குறித்து பெற்றோர் குழந்தைகள் நலத்துறை காவலர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுடன் பேசிய வாட்ஸ் ஆப் பதிவுகளும், ஆடியோ பதிவுகளும் விசாரணையில் வெளியாகியுள்ளன. மேலும், இந்தக்குற்றச்சாட்டை உறுதி செய்யும் நோக்கில் ஆசிரியர் ஸ்ரீதரிடமும், சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் அரசு மகளிர் பள்ளியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story