போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் சாவு; விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றவரும் லாரியில் மோதி பலி


போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் சாவு; விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றவரும் லாரியில் மோதி பலி
x

போரூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் பலியானார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற மின்வாரிய ஊழியரும், லாரியில் மோதி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம்

மாநகராட்சி ஊழியர் சாவு

சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் யோவான் (வயது 52). இவர், தாம்பரம் மாநகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் ஏரி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ேயாவான், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் பலியான யோவான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வேடிக்கை பார்த்தவரும் பலி

அப்போது தாம்பரம் அடுத்த படப்பை, சக்தி நகரை சேர்ந்த தங்கராஜ் (58) என்பவர் மோட்டார் சைக்கிளில் மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாைலயில் சென்று கொண்டிருந்தார். யோவான் பலியான இடத்தில் போலீசார் அதிகளவில் நிற்பதை கண்ட தங்கராஜ், விபத்தை வேடிக்கை பார்த்தபடியே சென்றார். அப்போது சாலையோரத்தில் நிறுத்தி இருந்த லாரி மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான தங்கராஜ், சென்னை கெல்லிசில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு ேமாட்டார்சைக்கிளில் திரும்பி சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிந்தது.

இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், யோவான் உடலுடன், சாலையின் எதிர் திசையில் இறந்து போன தங்கராஜ் உடலையும் சேர்த்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் அரக்கோணம், நடு தெருவை சேர்ந்தவர் பிரதீப் (22). இவர், போரூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் போரூர் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரதீப், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story