முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நாளை தமிழக பாசனத்திற்காக நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர், ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முதல் போகத்திற்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீர் என, மொத்தம் 300 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை முதல் 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story