போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை நியமிக்க தமிழக அரசு அரசாணை


போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை நியமிக்க தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 25 July 2023 10:16 AM GMT (Updated: 25 July 2023 11:07 AM GMT)

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகரமயமாக்கலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வு மூலமாக பணி நியமனம் செய்ய போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை போக்குவரத்துக் கழங்களில் பணியமர்த்த போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.







Next Story