தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்
x

தமிழக கவனர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த நிலையில் கவர்னர் டெல்லி செல்கிறார்.

சென்னை,

மிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். தமிழக கவனர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த நிலையில் கவர்னர் டெல்லி செல்கிறார்.


Next Story