தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணிப்பு

ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, விழாவை அமைச்சர் புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





