தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்


தமிழ்நாடு  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்
x

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கரூர்

கரூர்,

உண்ணாவிரத போராட்டம்

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மத்திய மண்டலம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் கணேசன், முன்னாள் மாநில தலைவர் மோசஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இதில் கரூர் மாவட்ட தலைவர் மோகன் உள்பட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மத்திய மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

துறைரீதியான நடவடிக்கை

கரூர் மாவட்ட கல்வித்துறையில் ஒன்றியம் விட்டு வேறு கல்வி மாவட்டத்திற்கு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கிய கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும், பணிமாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்தனர்.


Next Story