தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்
x

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர்

கரூர் மாவட்ட கல்வித்துறையில் ஒன்றியம் விட்டு வேறு கல்வி மாவட்டத்திற்கு பல கி.மீ. தொலைவிற்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கிய கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும், பணிமாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று 5-வது நாளாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிழக்கு மண்டலம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மயில், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் வீரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story