தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் - போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு...!


தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்  - போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு...!
x
தினத்தந்தி 2 Nov 2022 7:23 AM GMT (Updated: 2 Nov 2022 8:08 AM GMT)

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ள அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் பாராட்டுகள் என டி.ஜி.பி. கூறியுள்ளார்.

சென்னை,

டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த 30.10.2022 அன்று நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. தாமரைக் கண்ணன், இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் தென்மண்டல திரு. ஆஸ்ரா கர்க், இகா.ப. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில்குமார், இகா.ப, தலைமையில் இராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. மயில்வாகனன், 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.

உங்களது இந்தச் சாதனையின் மூலம் நமது தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள். பாதுகாப்புப் பணியில் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கடமையாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story