வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு


வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
x

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், வேட்டமங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளிக் கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், மரவள்ளிக்கிழங்கை சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி இருக்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story