175 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு


175 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
x

வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 175 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 175 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொப்பரை தேங்காய்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினால் தேங்காய் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலைக்கு மத்திய அரசின் நிறுவனம் கொள்முதல் செய்ய உள்ளது.

175 டன்

வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 100 டன், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 75 டன் என்று மொத்தம் 175 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழுடன் வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story