சங்கரன்கோவிலில் வீடியோ பதிவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை


சங்கரன்கோவிலில் வீடியோ பதிவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 4 July 2023 6:57 PM GMT (Updated: 5 July 2023 12:08 PM GMT)

சங்கரன்கோவிலில் வீடியோ பதிவிட்டு டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் வீடியோ பதிவிட்டு டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 47). இவர் திருவேங்கடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் பெருமாள்சாமியின் மனைவி உஷா (45) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த பெருமாள்சாமி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பெருமாள்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

வீடியோ பதிவு

மேலும் பெருமாள்சாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது மைத்துனருக்கு அனுப்பி இருந்தார். அதில் 'நான் வாழ தகுதியற்றவன். எனது மரணத்துக்கு என் மனைவியோ, குடும்பத்தினரோ காரணம் இல்லை. எனவே எனது மனைவி மீதோ, குடும்பத்தினர் மீதோ சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என காவல்துறையை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story