ஆட்டோ மோதி டாஸ்மாக் ஊழியர் பலி


ஆட்டோ மோதி டாஸ்மாக் ஊழியர் பலி
x
தினத்தந்தி 11 April 2023 7:00 PM GMT (Updated: 11 April 2023 7:00 PM GMT)

வடமதுரை அருகே ஆட்டோ மோதி டாஸ்மாக் ஊழியர் பலியாகினார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள பழையசித்துவார்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர், வேலை முடிந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அய்யலூர்-எரியோடு சாலையில், செம்மடைகுளம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சரவணனுக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story