கோவையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
கோவையில் மிலாதுநபி, காந்தி ஜெயந்தியையொட்டி 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
கோயம்புத்தூர்
கோவை
நாடு முழுவதும் வருகிற 28-ந்தேதி மிலாதுநபியும், அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய நாட்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இயங்கும் மதுபான கூடங்களும் செயல்படாது.
எனவே மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி அந்த பகுதிகளில் மதுபானம் விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story