முல்லைப்பெரியாற்றில் மூழ்கி டெய்லர் சாவு


முல்லைப்பெரியாற்றில் மூழ்கி டெய்லர் சாவு
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

முல்லைப்பெரியாற்றில் மூழ்கி டெய்லர் பரிதாபமாக இறந்தார்.

தேனி

உத்தமபாளையம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 40). டெய்லர். நேற்று இவர், உத்தமபாளையத்தில் ஓடும் முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தார். அவர் ஆழமான பகுதியில் நின்று குளித்ததாக தெரிகிறது. இதனால் அவர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். இதை ஆற்றில் சிறிது தூரத்தில் நின்று குளித்து கொண்டிருந்த சிலர் பார்த்து அவரை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அதற்குள் பக்ருதீன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story