ஆவடியில் கியாஸ் கசிவால் டீ கடையில் தீ விபத்து


ஆவடியில் கியாஸ் கசிவால் டீ கடையில் தீ விபத்து
x

ஆவடியில் கியாஸ் கசிவால் டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை

ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 54). இவருடைய தாயார் பார்வதி (75). இருவரும் ஆவடி பஜாரில் டீ கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை திடீரென இவர்களது கடையில் கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. பாபு மற்றும் அவரது தாயார் பார்வதி இருவருக்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் ஆவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கடையில் இருந்த சிலிண்டர் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து ஏற்பட்டதும் கடையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிவிட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story