பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் கைது


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் கைது
x

புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இங்கு புதுசூரங்குடி,நடுச்சூரங்குடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் சுமார் 268 பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் தாமோதரன். இவர் அந்த பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவதும், தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, அந்தப் பள்ளி மாணவிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பள்ளியில் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும், முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் தாமோதரனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


Next Story