இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய கொக்குபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கல்யாணி (வயது 39). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியே இருந்த கல்யாணி மின்விசிறியில் புடவையை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story