இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாமகிரிப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

ராசிபுரம்

லாரி டிரைவர்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய். (வயது 28) இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் தமிழரசி தம்பதியரின் மகள் தீபலட்சுமி (28). விஜய்-தீபலட்சுமி இருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (5), நிதிலேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். பின்னர் விஜய், அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். அவர் போன் எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது தீபலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபலட்சுமியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தீபலட்சுமி வயிற்று வலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் தீபலட்சுமி வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபலட்சுமிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


Next Story