பெற்றோர் கண்டித்ததால்இளம்பெண் தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புல்லாணி அருகே உள்ள கொல்லந்தோப்பை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் விஜி (வயது 19). இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் பொழுதை கழித்து வந்தாராம். இதனை அவரின் தாய் முருகம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த விஜி விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





