செல்போன் திருடிய வாலிபர் கைது

நெல்லை அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் அலெக்சாண்டர் (வயது 34). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் மூன்றடைப்பை சேர்ந்த இசக்கியப்பன் (23) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஓட்டலில் 3 செல்போன்கள் திருடப்பட்டது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டல் ஊழியரான இசக்கியப்பன் செல்போனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





