வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது
திருவையாறு
திருவையாறு அருகே 4 வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமாநேரியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அப்பு என்கிற சரண்ராஜ் (வயது24) என்பவர் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த குழந்தை தனது பெற்றோரிடம் கூறியது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சரண்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





