திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கோவை சூலூரை அடுத்த தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசீலன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 2 முறை திருமணம் முடிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ரத்தினசீலன் எலி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்ததாக தெரிகிறது. இதனால் அவர் வாந்தி எடுத்துள்ளார். இதனைக்கண்ட அவரது தந்தை முத்துக்குமார், அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story