விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

நெல்லை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முருகன் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story