விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கிணத்துக்கடவு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 34), கூலி தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. அங்கமுத்து வேலைக்கு செல்லாமல் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்கை கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அங்குமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






