விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே எம்.தெற்கு தெரு கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து மகன் சிவா (வயது 20). இவர் நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா நேற்று இறந்தார். இதுகுறித்து மணிமுத்து மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story