விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

ஆம்பூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 34). இவர் குங்குமம் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story