ராமநத்தம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


ராமநத்தம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

ராமநத்தம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் மணிகண்டன் (வயது 29). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதை அவருடைய தாய் சிவபாக்கியம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story