விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பாலு(வயது 29). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று குடிபோதையில் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாலு பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை? இது குறித்து பாலுவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story