வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தை சேர்ந்தவர் அருள் தாமஸ் மகன் ஈஸ்டர் ராஜ் (வயது 34). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்வமெர்சி என்ற மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மருதடியூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் நேற்று முன்தினம் ஈஸ்டர் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story