மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
அரக்கோணத்தை அடுத்த குருராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நாகராஜன் (வயது 30), கார் டிரைவராக பணியாற்றினார்.
நேற்று முன்தினம் இரவு நாகராஜன் அவரது தாயாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாகராஜன் நள்ளிரவு மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





